Aathumaavae Karththaraiyae ஆத்துமாவே கர்த்தரையே-J435



ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி அமர்ந்திரு

ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி அமர்ந்திரு (2)

நான் நம்புவது அவராலே(கர்த்தராலே) வருமே வந்திடுமே

1. விட்டுவிடாதே நம்பிக்கையை வெகுமதி உண்டு
விசுவாசத்தால் உலகத்தையே வெல்வது நீ தான் (2)
உனக்குள் வாழ்பவர் உலகை ஆள்பவர் (2) -நான்

2. உன்னதமான கர்த்தர் கரத்தின்
மறைவில் வாழ்கின்றோம்
சர்வ வல்லவர் நிழலில்
தினம் வாசம் செய்கின்றோம் (2)
வாதை அணுகாது தீங்கு நேரிடாது (2) -நான்

3. பாழாக்கும் கொள்ளை
நோய் மேற்கொள்ளாமல்
பாதுகாத்து பயம் நீக்கி ஜெயம் தருகின்றார் (2)
சிறகின் நிழலிலே மூடி மறைக்கின்றார் (2) -நான்

4. கர்த்தர் நமது அடைக்கலமும் புகலிடம் ஆனார் - நாம்
நம்பியிருக்கும் நம் தகப்பன் என்று சொல்லுவோம் (2)
சோதனை ஜெயிப்போம் சாதனை படைப்போம் (2) -நான்

5. நமது தேவன் என்றென்றைக்கும் சதாகாலமும்
இறுதிவரை வழிநடத்தும் தந்தை அல்லவா (2)
இரக்கம் உள்ளவர் நம் இதயம் வாழ்பவர் (2) -நான்

தந்தை அவர்கள் இந்த வசனங்களை அடிபடையாக கொண்டு பாடியுள்ளார்

பூரிகை ஊதிடுவோம்


Aathumaavae Karththaraiyae
Lyrics in Thanglish 

Aaththumaavae karththaraiyae Nnokki amarnthiru (2)

Naan nampuvathu avaraalae(karththaraalae) varumae vanthidumae

1. Vittuvidaathae nampikkaiyai vekumathi unndu
Visuvaasaththaal ulakaththaiyae velvathu nee thaan (2)
Unakkul vaalpavar ulakai aalpavar (2) -naan

2. Unnathamaana Karththar karaththin
Maraivil vaalkintom
Sarva vallavar nilalil
Thinam vaasam seykintom (2)
Vaathai anukaathu theengu naeridaathu (2) -naan

3. Paalaakkum kollai
Nnoy maerkollaamal
Paathukaaththu payam neekki jeyam tharukintar (2)
Sirakin nilalilae mooti maraikkintar (2) -naan

4. Karththar namathu ataikkalamum pukalidam aanaar - naam
Nampiyirukkum nam thakappan entu solluvom (2)
Sothanai jeyippom saathanai pataippom (2) -naan

5. Namathu Dhevan ententaikkum sathaakaalamum
Iraுthivarai valinadaththum thanthai allavaa (2)
Irakkam ullavar nam ithayam vaalpavar (2) -naan

பாடல்களை எழுத்துக்கள் மூலம் தேடுக

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Sj.Berchmans Songs Volumes



அருட்தந்தை S.J. பெர்க்மான்ஸ் வாழ்க்கை வரலாறு (ம) ஊழியப் பாதை குறித்த தகவல்கள். 

பிறப்பு: 1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி தந்தை Sj.Berchmans பிறந்தார்

பிறப்பிடம்: தந்தை Sj.Berchmans அவர்கள் சிவகங்கை மாவட்டம், பரமக்குடிக்கு அருகிலுள்ள சூசைப்பார் பட்டி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார்.

பெற்றோர்: அவருடைய பெற்றோர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சூசை மற்றும் பெரியநாயகம் தம்பதியருக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார்.

கல்வி: மதுரையிலுள்ள செயின்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.

பாடல்கள்: தந்தை அவர்கள் அநேக பாடல்கள் பாடியுள்ளார் 480-க்கும் மேற்பட்ட ஆவிக்குரிய பாடல்களை எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார்.

குருத்துவம்: சிறுவயதிலேயே கத்தோலிக்க குருவாக விரும்பிய இவர், திருச்சியில் உள்ள செயின்ட் பால் செமினாரியில் (St. Paul Seminary) பயின்று, 1974-ல் கத்தோலிக்க பாதிரியாராக அருட்பொழிவு செய்யப்பட்டார்.

இசை ஆர்வம்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பணியாற்றியபோது கர்நாடக இசையைக் கற்றுக் கொண்டார். இதுவே அவர் பிற்காலத்தில் பாடல்களை இயற்றவும், இசையமைக்கவும் அடித்தளமாக அமைந்தது.

ஊழியம்: ஜாதி, மத பேதமின்றி அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் ஜெபக்கூட்டங்களை நடத்தி வருகிறார். தற்போது எளிய ஆடைகளையே விரும்பி அணிந்து, தனது ஆன்மீகப் பணியைத் தொடர்ந்து வருகிறார். 1970-களின் இறுதியில் உடல்நலக் குறைவாலும், தனிமையாலும் பாதிக்கப்பட்டிருந்தபோது, இறைவனின் அழைப்பைத் தன் இதயத்தில் உணர்ந்துள்ளார்.

பரிசுத்த ஆவியின் அபிஷேகம்: 1983-ல் டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டு ஆவிக்குரிய அனுபவத்தைப் பெற்றார்.

ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்:
"ஜெபத்தோட்டம்" (Jebathottam Ministries) என்ற அமைப்பை சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நிறுவினார்.
இவர் இயற்றிய "விசுவாச கீதங்கள்" மற்றும் "ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்" பாடல் தொகுப்புகள் உலகெங்கிலும் உள்ள தமிழ் கிறிஸ்தவர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்துள்ளது இந்த பாடல் வரிகளை நம்முடைய தளத்தில் தந்தை அவர்கள் பாடிய வண்ணமாக அமைக்கப்பட்டுள்ளது.

அருட்தந்தை S.J. பெர்க்மான்ஸ் (Fr. S.J. Berchmans) அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் ஊழியப் பாதை குறித்த தகவல்கள் இதுவே