Anbu Koorntha Kiristhuvinalae அன்புகூர்ந்த கிறிஸ்துவினாலே-J413
அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன்
வேதனை துன்பம் இன்னல் இடர்கள்
எதுவும் பிரிக்க முடியாது
கிறிஸ்துவின் அன்பிலிருந்து
1. எனது சார்பில் கர்த்தர் இருக்க
எனக்கு எதிராய் யார் இருப்பார்?
மகனையே தந்தீரையா
மற்ற அனைத்தையும் தருவீரையா!
2.தெரிந்துகொண்ட உம் மகன் நான்
குற்றம் சாட்ட யார் இயலும்?
நீதிமானாய் மாற்றினீரே
தண்டனைத் தீர்ப்பு எனக்கில்லையே!
3. கிறிஸ்து எனக்காய் மரித்தாரே
எனக்காய் மீண்டும் உயிர்த்தாரே
பரலோகத்தில் தினம் எனக்காய்
பரிந்து பேசி ஜெபிக்கின்றார்
4. நிகழ்வனவோ வருவனவோ
வாழ்வோ சாவோ பிரித்திடுமோ
முற்றிலும் நான் ஜெயம் பெறுவேன்
வெற்றி மேல் வெற்றி நான் காண்பேன்
5. கிறிஸ்துவின் சாயலாய் உருமாற
முன்குறித்தாரே பிறக்குமுன்னே
சகலமும் நன்மைக்கே
நன்மைக்கு ஏதுவாய் நடத்திச் செல்வார்
தந்தை அவர்கள் இந்த வசனங்களை அடிபடையாக கொண்டு பாடியுள்ளார்
பூரிகை ஊதிடுவோம்
Poorigai oothiduvom
Lyrics in Thanglish
Anbu koorntha en Kristhuvinaalae
Anaiththilum naan vetti peraுvaen
Vaethanai thunpam innal idarkal
Ethuvum pirikka mutiyaathu
Kristhuvin anpilirunthu
1. Enathu saarpil Karththar irukka
Enakku ethiraay yaar iruppaar?
Makanaiyae thantheeraiyaa
Matta anaiththaiyum tharuveeraiyaa!
2.therinthukonnda um makan naan
Kuttam saatta yaar iyalum?
Neethimaanaay maattineerae
Thanndanaith theerppu enakkillaiyae!
3. Kristhu enakkaay mariththaarae
Enakkaay meenndum uyirththaarae
Paralokaththil thinam enakkaay
Parinthu paesi jepikkintar
4. Nikalvanavo varuvanavo
Vaalvo saavo piriththidumo
Muttilum naan jeyam peraுvaen
Vetti mael vetti naan kaannpaen
5. Kristhuvin saayalaay urumaara
Munkuriththaarae pirakkumunnae
Sakalamum nanmaikkae
Nanmaikku aethuvaay nadaththich selvaar
பாடல்களை எழுத்துக்கள் மூலம் தேடுக
Sj.Berchmans Songs Volumes
அருட்தந்தை S.J. பெர்க்மான்ஸ் வாழ்க்கை வரலாறு (ம) ஊழியப் பாதை குறித்த தகவல்கள்.
பிறப்பு: 1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி தந்தை Sj.Berchmans பிறந்தார்
பிறப்பிடம்: தந்தை Sj.Berchmans அவர்கள் சிவகங்கை மாவட்டம், பரமக்குடிக்கு அருகிலுள்ள சூசைப்பார் பட்டி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார்.
பெற்றோர்: அவருடைய பெற்றோர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சூசை மற்றும் பெரியநாயகம் தம்பதியருக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார்.
கல்வி: மதுரையிலுள்ள செயின்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.
பாடல்கள்: தந்தை அவர்கள் அநேக பாடல்கள் பாடியுள்ளார் 480-க்கும் மேற்பட்ட ஆவிக்குரிய பாடல்களை எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார்.
குருத்துவம்: சிறுவயதிலேயே கத்தோலிக்க குருவாக விரும்பிய இவர், திருச்சியில் உள்ள செயின்ட் பால் செமினாரியில் (St. Paul Seminary) பயின்று, 1974-ல் கத்தோலிக்க பாதிரியாராக அருட்பொழிவு செய்யப்பட்டார்.
இசை ஆர்வம்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பணியாற்றியபோது கர்நாடக இசையைக் கற்றுக் கொண்டார். இதுவே அவர் பிற்காலத்தில் பாடல்களை இயற்றவும், இசையமைக்கவும் அடித்தளமாக அமைந்தது.
ஊழியம்: ஜாதி, மத பேதமின்றி அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் ஜெபக்கூட்டங்களை நடத்தி வருகிறார். தற்போது எளிய ஆடைகளையே விரும்பி அணிந்து, தனது ஆன்மீகப் பணியைத் தொடர்ந்து வருகிறார். 1970-களின் இறுதியில் உடல்நலக் குறைவாலும், தனிமையாலும் பாதிக்கப்பட்டிருந்தபோது, இறைவனின் அழைப்பைத் தன் இதயத்தில் உணர்ந்துள்ளார்.
பரிசுத்த ஆவியின் அபிஷேகம்: 1983-ல் டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டு ஆவிக்குரிய அனுபவத்தைப் பெற்றார்.
ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்:
"ஜெபத்தோட்டம்" (Jebathottam Ministries) என்ற அமைப்பை சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நிறுவினார்.
இவர் இயற்றிய "விசுவாச கீதங்கள்" மற்றும் "ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்" பாடல் தொகுப்புகள் உலகெங்கிலும் உள்ள தமிழ் கிறிஸ்தவர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்துள்ளது இந்த பாடல் வரிகளை நம்முடைய தளத்தில் தந்தை அவர்கள் பாடிய வண்ணமாக அமைக்கப்பட்டுள்ளது.
அருட்தந்தை S.J. பெர்க்மான்ஸ் (Fr. S.J. Berchmans) அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் ஊழியப் பாதை குறித்த தகவல்கள் இதுவே
