Ennai Kaanbavarae என்னைக் காண்பவரே-J429
என்னை காண்பவரே தினம் காப்பவரே (2)
1. ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்
சுற்றி சுற்றி சூழ்ந்திக்கின்றீர் (2)
நான் அமர்வதும் நான் எழுவதும் (2)
நன்றாய் நீர் அறிந்திக்கின்றீர் (2) - என்னை
2. எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்
எல்லாமே அறிந்திக்கின்றீர் (2)
நடந்தாலும் படுத்தாலும்
அப்பா நீர் அறிந்திக்கின்றீர் (2)
நன்றி ராஜா இயேசு ராஜா (2) - என்னை
3. முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கி
சுற்றி என்னை சூழ்ந்திக்கின்றீர் (2)
உம் திரு கரத்தால் தினமும்
என்னை பற்றி பிடித்திருக்கின்டீர்
நன்றி ராஜா இயேசு ராஜா (2) - என்னை
4. கருவை உம் கண்கள் கண்டன
மறைவாய் வளர்வதை கவனித்தீரே - என்
அதிசயமாய் பிரமிக்கத்தக்க
பக்குவமாய் உருவாக்கினீர்
நன்றி ராஜா இயேசு ராஜா (2) - என்னை
தந்தை அவர்கள் இந்த வசனங்களை அடிபடையாக கொண்டு பாடியுள்ளார்
பூரிகை ஊதிடுவோம்
Ennai Kaanbavarae Lyrics in Thanglish
Ennai kaannpavarae thinam kaappavarae (2)
1. Aaraaynthu arinthirukkinteer
Sutti sutti soolnthikkinteer (2)
Naan amarvathum naan eluvathum (2)
Nantay neer arinthikkinteer (2) - ennai
2. Ennnangal aekkangal ellaam
Ellaamae arinthikkinteer (2)
Nadanthaalum paduththaalum
Appaa neer arinthikkinteer (2)
Nanti raajaa Yesu raajaa (2) - ennai
3. Munnum pinnum nerukki nerukki
Sutti ennai soolnthikkinteer (2)
Um thiru karaththaal thinamum
Ennai patti pitiththirukkinteer
Nanti raajaa Yesu raajaa (2) - ennai
4. Karuvai um kannkal kanndana
Maraivaay valarvathai kavaniththeerae - en
Athisayamaay piramikkaththakka
Pakkuvamaay uruvaakkineer
Nanti raajaa Yesu raajaa (2) - ennai
பாடல்களை எழுத்துக்கள் மூலம் தேடுக
Sj.Berchmans Songs Volumes
அருட்தந்தை S.J. பெர்க்மான்ஸ் வாழ்க்கை வரலாறு (ம) ஊழியப் பாதை குறித்த தகவல்கள்.
பிறப்பு: 1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி தந்தை Sj.Berchmans பிறந்தார்
பிறப்பிடம்: தந்தை Sj.Berchmans அவர்கள் சிவகங்கை மாவட்டம், பரமக்குடிக்கு அருகிலுள்ள சூசைப்பார் பட்டி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார்.
பெற்றோர்: அவருடைய பெற்றோர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சூசை மற்றும் பெரியநாயகம் தம்பதியருக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார்.
கல்வி: மதுரையிலுள்ள செயின்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.
பாடல்கள்: தந்தை அவர்கள் அநேக பாடல்கள் பாடியுள்ளார் 480-க்கும் மேற்பட்ட ஆவிக்குரிய பாடல்களை எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார்.
குருத்துவம்: சிறுவயதிலேயே கத்தோலிக்க குருவாக விரும்பிய இவர், திருச்சியில் உள்ள செயின்ட் பால் செமினாரியில் (St. Paul Seminary) பயின்று, 1974-ல் கத்தோலிக்க பாதிரியாராக அருட்பொழிவு செய்யப்பட்டார்.
இசை ஆர்வம்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பணியாற்றியபோது கர்நாடக இசையைக் கற்றுக் கொண்டார். இதுவே அவர் பிற்காலத்தில் பாடல்களை இயற்றவும், இசையமைக்கவும் அடித்தளமாக அமைந்தது.
ஊழியம்: ஜாதி, மத பேதமின்றி அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் ஜெபக்கூட்டங்களை நடத்தி வருகிறார். தற்போது எளிய ஆடைகளையே விரும்பி அணிந்து, தனது ஆன்மீகப் பணியைத் தொடர்ந்து வருகிறார். 1970-களின் இறுதியில் உடல்நலக் குறைவாலும், தனிமையாலும் பாதிக்கப்பட்டிருந்தபோது, இறைவனின் அழைப்பைத் தன் இதயத்தில் உணர்ந்துள்ளார்.
பரிசுத்த ஆவியின் அபிஷேகம்: 1983-ல் டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டு ஆவிக்குரிய அனுபவத்தைப் பெற்றார்.
ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்:
"ஜெபத்தோட்டம்" (Jebathottam Ministries) என்ற அமைப்பை சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நிறுவினார்.
இவர் இயற்றிய "விசுவாச கீதங்கள்" மற்றும் "ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்" பாடல் தொகுப்புகள் உலகெங்கிலும் உள்ள தமிழ் கிறிஸ்தவர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்துள்ளது இந்த பாடல் வரிகளை நம்முடைய தளத்தில் தந்தை அவர்கள் பாடிய வண்ணமாக அமைக்கப்பட்டுள்ளது.
அருட்தந்தை S.J. பெர்க்மான்ஸ் (Fr. S.J. Berchmans) அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் ஊழியப் பாதை குறித்த தகவல்கள் இதுவே
