Kaarunyam Ennum காருண்யம் என்னும்-J433
காருண்யம் என்னும் கேடயத்தால் காத்துக்கொள்கின்றீர்
கர்த்தாவே நீதிமானை ஆசிர்வதிக்கின்றீர்
எதிர்கால பயம் இல்லையே
நீர் எனக்குள் இருப்பதால் (2)
எதை குறித்தும் கலக்கம் இல்ல
எனக்குள்ளே இருப்பதனால் (2)
1. நம்பும் மனிதர் சந்தோஷமாய்
மகிழ்வுடன் பாடுவார்கள்- உம்மை (2)
அவர்களை நீர் காப்பாற்றுவீர்
அனுதினமும் கைவிடாமல் (2) -எதிர்கால
2. தெரிந்துகொண்டீர் உமக்கென்று
அதை நான் அறிந்துகொண்டேன் (2)
நீதியுள்ள பலி செலுத்தி
உம்மையே நான் சார்ந்துக்கொண்டேன் (2) -எதிர்கால
3. உலகம் தருகின்ற மகிழ்வை விட
மேலான மகிழ்ச்சி நீரே (2)
சமாதானத்தால் நிரப்புகிறீர்
சுகம் தந்து நடத்துகிறீர் (2) -எதிர்கால
தந்தை அவர்கள் இந்த வசனங்களை அடிபடையாக கொண்டு பாடியுள்ளார்
பூரிகை ஊதிடுவோம்
Kaarunyam Ennum
Lyrics in Thanglish
Kaarunnyam ennum kaedayaththaal kaaththukkolkinteer
Karththaavae neethimaanai aasirvathikkinteer
Ethirkaala payam illaiyae
Neer enakkul iruppathaal (2)
Ethai kuriththum kalakkam illa
Enakkullae iruppathanaal (2)
1. Nampum manithar santhoshamaay
Makilvudan paaduvaarkal- ummai (2)
Avarkalai neer kaappaattaுveer
Anuthinamum kaividaamal (2) -ethirkaala
2. Therinthukonnteer umakkentu
Athai naan arinthukonntaen (2)
Neethiyulla pali seluththi
Ummaiyae naan saarnthukkonntaen (2) -ethirkaala
3. Ulakam tharukinta makilvai vida
Maelaana makilchchi neerae (2)
Samaathaanaththaal nirappukireer
Sukam thanthu nadaththukireer (2) -ethirkaala
பாடல்களை எழுத்துக்கள் மூலம் தேடுக
Sj.Berchmans Songs Volumes
அருட்தந்தை S.J. பெர்க்மான்ஸ் வாழ்க்கை வரலாறு (ம) ஊழியப் பாதை குறித்த தகவல்கள்.
பிறப்பு: 1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி தந்தை Sj.Berchmans பிறந்தார்
பிறப்பிடம்: தந்தை Sj.Berchmans அவர்கள் சிவகங்கை மாவட்டம், பரமக்குடிக்கு அருகிலுள்ள சூசைப்பார் பட்டி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார்.
பெற்றோர்: அவருடைய பெற்றோர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சூசை மற்றும் பெரியநாயகம் தம்பதியருக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார்.
கல்வி: மதுரையிலுள்ள செயின்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.
பாடல்கள்: தந்தை அவர்கள் அநேக பாடல்கள் பாடியுள்ளார் 480-க்கும் மேற்பட்ட ஆவிக்குரிய பாடல்களை எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார்.
குருத்துவம்: சிறுவயதிலேயே கத்தோலிக்க குருவாக விரும்பிய இவர், திருச்சியில் உள்ள செயின்ட் பால் செமினாரியில் (St. Paul Seminary) பயின்று, 1974-ல் கத்தோலிக்க பாதிரியாராக அருட்பொழிவு செய்யப்பட்டார்.
இசை ஆர்வம்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பணியாற்றியபோது கர்நாடக இசையைக் கற்றுக் கொண்டார். இதுவே அவர் பிற்காலத்தில் பாடல்களை இயற்றவும், இசையமைக்கவும் அடித்தளமாக அமைந்தது.
ஊழியம்: ஜாதி, மத பேதமின்றி அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் ஜெபக்கூட்டங்களை நடத்தி வருகிறார். தற்போது எளிய ஆடைகளையே விரும்பி அணிந்து, தனது ஆன்மீகப் பணியைத் தொடர்ந்து வருகிறார். 1970-களின் இறுதியில் உடல்நலக் குறைவாலும், தனிமையாலும் பாதிக்கப்பட்டிருந்தபோது, இறைவனின் அழைப்பைத் தன் இதயத்தில் உணர்ந்துள்ளார்.
பரிசுத்த ஆவியின் அபிஷேகம்: 1983-ல் டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டு ஆவிக்குரிய அனுபவத்தைப் பெற்றார்.
ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்:
"ஜெபத்தோட்டம்" (Jebathottam Ministries) என்ற அமைப்பை சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நிறுவினார்.
இவர் இயற்றிய "விசுவாச கீதங்கள்" மற்றும் "ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்" பாடல் தொகுப்புகள் உலகெங்கிலும் உள்ள தமிழ் கிறிஸ்தவர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்துள்ளது இந்த பாடல் வரிகளை நம்முடைய தளத்தில் தந்தை அவர்கள் பாடிய வண்ணமாக அமைக்கப்பட்டுள்ளது.
அருட்தந்தை S.J. பெர்க்மான்ஸ் (Fr. S.J. Berchmans) அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் ஊழியப் பாதை குறித்த தகவல்கள் இதுவே
