Kalangum Naeramellam கலங்கும் நேரமெல்லாம்-J436
ஜெபம் கேட்பவரே சுகம் தருபவரே (2)
1. ஆபத்து நாட்களிலே அதிசயம் செய்பவரே (2)
கூப்பிடும் போதெல்லாம் பதில் தருபவரே (2)
யெகோவா ரவ்ப்பா சுகம் தரும் தகப்பன்
உமக்கே ஸ்தோத்திரம் (2)
உமக்கே ஸ்தோத்திரம் உயிருள்ள நாள் எல்லாம் (2)
2. தொல்லைகள் சூழ்ந்திருக்கையில்
துணையாய் வருபவரே (2)
வல்லமை வலக்கரத்தால்
விடுதலை தருபவரே (2) -யெகோவா ரவ்ப்பா
3. பலவீனம் ஏற்று கொண்டீர் என்
நோய்கள் சுமந்து கொண்டீர் (2)
சுகமானேன் சுகமானேன்
ரட்சகர் தழும்புகளால்- என் -யெகோவா ரவ்ப்பா
4. உம்மையே நம்புவதால்
நான் அசைக்கப்படுவதில்லை (2)
சகலமும் நன்மைக்கு
ஏதுவாய் தகப்பன் நடத்துகுறீர் -யெகோவா ரவ்ப்பா
தந்தை அவர்கள் இந்த வசனங்களை அடிபடையாக கொண்டு பாடியுள்ளார்
பூரிகை ஊதிடுவோம்
Kalangum Naeramellam
Lyrics in Thanglish
Kalangum naeramellaam kannnneer thutaippavarae
Jebam kaetpavarae sukam tharupavarae (2)
1. Aapaththu naatkalilae athisayam seypavarae (2)
Kooppidum pothellaam pathil tharupavarae (2)
Yekovaa ravppaa sukam tharum thakappan
Umakkae Sthoththiram (2)
Umakkae Sthoththiram uyirulla naal ellaam (2)
2. Thollaikal soolnthirukkaiyil
Thunnaiyaay varupavarae (2)
Vallamai valakkaraththaal
Viduthalai tharupavarae (2) -yekovaa ravppaa
3. Palaveenam aettaு konnteer en
Nnoykal sumanthu konnteer (2)
Sukamaanaen sukamaanaen
Ratchakar thalumpukalaal- en -yekovaa ravppaa
4. Ummaiyae nampuvathaal
Naan asaikkappaduvathillai (2)
Sakalamum nanmaikku
Aethuvaay thakappan nadaththukureer -yekovaa ravppaa
பாடல்களை எழுத்துக்கள் மூலம் தேடுக
Sj.Berchmans Songs Volumes
அருட்தந்தை S.J. பெர்க்மான்ஸ் வாழ்க்கை வரலாறு (ம) ஊழியப் பாதை குறித்த தகவல்கள்.
பிறப்பு: 1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி தந்தை Sj.Berchmans பிறந்தார்
பிறப்பிடம்: தந்தை Sj.Berchmans அவர்கள் சிவகங்கை மாவட்டம், பரமக்குடிக்கு அருகிலுள்ள சூசைப்பார் பட்டி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார்.
பெற்றோர்: அவருடைய பெற்றோர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சூசை மற்றும் பெரியநாயகம் தம்பதியருக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார்.
கல்வி: மதுரையிலுள்ள செயின்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.
பாடல்கள்: தந்தை அவர்கள் அநேக பாடல்கள் பாடியுள்ளார் 480-க்கும் மேற்பட்ட ஆவிக்குரிய பாடல்களை எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார்.
குருத்துவம்: சிறுவயதிலேயே கத்தோலிக்க குருவாக விரும்பிய இவர், திருச்சியில் உள்ள செயின்ட் பால் செமினாரியில் (St. Paul Seminary) பயின்று, 1974-ல் கத்தோலிக்க பாதிரியாராக அருட்பொழிவு செய்யப்பட்டார்.
இசை ஆர்வம்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பணியாற்றியபோது கர்நாடக இசையைக் கற்றுக் கொண்டார். இதுவே அவர் பிற்காலத்தில் பாடல்களை இயற்றவும், இசையமைக்கவும் அடித்தளமாக அமைந்தது.
ஊழியம்: ஜாதி, மத பேதமின்றி அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் ஜெபக்கூட்டங்களை நடத்தி வருகிறார். தற்போது எளிய ஆடைகளையே விரும்பி அணிந்து, தனது ஆன்மீகப் பணியைத் தொடர்ந்து வருகிறார். 1970-களின் இறுதியில் உடல்நலக் குறைவாலும், தனிமையாலும் பாதிக்கப்பட்டிருந்தபோது, இறைவனின் அழைப்பைத் தன் இதயத்தில் உணர்ந்துள்ளார்.
பரிசுத்த ஆவியின் அபிஷேகம்: 1983-ல் டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டு ஆவிக்குரிய அனுபவத்தைப் பெற்றார்.
ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்:
"ஜெபத்தோட்டம்" (Jebathottam Ministries) என்ற அமைப்பை சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நிறுவினார்.
இவர் இயற்றிய "விசுவாச கீதங்கள்" மற்றும் "ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்" பாடல் தொகுப்புகள் உலகெங்கிலும் உள்ள தமிழ் கிறிஸ்தவர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்துள்ளது இந்த பாடல் வரிகளை நம்முடைய தளத்தில் தந்தை அவர்கள் பாடிய வண்ணமாக அமைக்கப்பட்டுள்ளது.
அருட்தந்தை S.J. பெர்க்மான்ஸ் (Fr. S.J. Berchmans) அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் ஊழியப் பாதை குறித்த தகவல்கள் இதுவே
