Karthave neer ennai கர்த்தாவே நீர் என்னை J454
கர்த்தாவே நீர் என்னை கைதூக்கி எடுத்தீர்
போற்றி புகழ்ந்து உயர்த்துகிறேன்
பகைவர் பார்த்து நகைத்திடாமல்
பாதுகாத்தீர் இதுவரையில்
உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன்
உயர்த்தி மகிழ்கின்றேன்
Jesus Jesus
1. உதவி தேடி நோக்கி கூப்பிட்டேன்
மனது உருகி சுகம் தந்தீர்
சாவுகுழியில் இறங்கவிடாமல்
உயிரை காத்து தப்புவித்தீர்
2. பரிசுத்தவான்கள் துதிகீதம் பாடுங்கள்
பரிசுத்தர் நாமம் உயர்த்துங்கள்
கர்த்தரின் தயவோ வாழ்நாளெல்லாம்
நீடிக்கும் என்பது நிச்சயமே
3. இரவு நேரம் அழுகையென்றாலும்
விடியக்காலையில் ஆனந்தமே
உந்தன் தயவால் எனது வாழ்வு
மலைபோல் உறுதியாய் நிற்க செய்தீர்
4. கதறிக் கொண்டிருந்தேன் கண்ணோக்கி பார்த்து
களிப்புடன் நடனம் ஆடச் செய்தீர்
துயர ஆடையை தூக்கி எறிந்து
மகிழ்ச்சி உடையால் உடுத்தினீரே
Karthave neer ennai kaithuki edutheer
Pottri pugalnthu uyarthugiren pagaivar
Paathu nagaithidamal pathugathir ithuvaraiyil
Jesus Jesus
1.Uthavi thedi nooki kuppittean
Manam urugi sugam thanthir saavukuliyil
Irangidamal uyirai kaathu thappuvithir
Uyarthuhiren valthuhiren uyarthi
Mahilheren
2.Parisuthavangal thuthigeetham paadungal
Parisuthar namam uyarthungal kartharin
Thayavo valnalellam needikkum yenbathu nichayame
3.Iravu neram alugaiyendralum
Vidiyarkalaiyil ananthame unthan
Thayaval enathu Jeevan malaipol
Uruthiyai nirka seitheer
4. Kathari kondirunthen kannokki
Paarthir kalipudan nadanam aada seitheer
Thuyara aadaiyai thukki erinthu magilchi
Udaiyal uduthineer
அருட்தந்தை S.J. பெர்க்மான்ஸ் வாழ்க்கை வரலாறு (ம) ஊழியப் பாதை குறித்த தகவல்கள்.
பிறப்பு: 1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி தந்தை Sj.Berchmans பிறந்தார்
பிறப்பிடம்: தந்தை Sj.Berchmans அவர்கள் சிவகங்கை மாவட்டம், பரமக்குடிக்கு அருகிலுள்ள சூசைப்பார் பட்டி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார்.
பெற்றோர்: அவருடைய பெற்றோர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சூசை மற்றும் பெரியநாயகம் தம்பதியருக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார்.
கல்வி: மதுரையிலுள்ள செயின்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.
பாடல்கள்: தந்தை அவர்கள் அநேக பாடல்கள் பாடியுள்ளார் 480-க்கும் மேற்பட்ட ஆவிக்குரிய பாடல்களை எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார்.
குருத்துவம்: சிறுவயதிலேயே கத்தோலிக்க குருவாக விரும்பிய இவர், திருச்சியில் உள்ள செயின்ட் பால் செமினாரியில் (St. Paul Seminary) பயின்று, 1974-ல் கத்தோலிக்க பாதிரியாராக அருட்பொழிவு செய்யப்பட்டார்.
இசை ஆர்வம்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பணியாற்றியபோது கர்நாடக இசையைக் கற்றுக் கொண்டார். இதுவே அவர் பிற்காலத்தில் பாடல்களை இயற்றவும், இசையமைக்கவும் அடித்தளமாக அமைந்தது.
ஊழியம்: ஜாதி, மத பேதமின்றி அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் ஜெபக்கூட்டங்களை நடத்தி வருகிறார். தற்போது எளிய ஆடைகளையே விரும்பி அணிந்து, தனது ஆன்மீகப் பணியைத் தொடர்ந்து வருகிறார். 1970-களின் இறுதியில் உடல்நலக் குறைவாலும், தனிமையாலும் பாதிக்கப்பட்டிருந்தபோது, இறைவனின் அழைப்பைத் தன் இதயத்தில் உணர்ந்துள்ளார்.
பரிசுத்த ஆவியின் அபிஷேகம்: 1983-ல் டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டு ஆவிக்குரிய அனுபவத்தைப் பெற்றார்.
ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்:
"ஜெபத்தோட்டம்" (Jebathottam Ministries) என்ற அமைப்பை சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நிறுவினார்.
இவர் இயற்றிய "விசுவாச கீதங்கள்" மற்றும் "ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்" பாடல் தொகுப்புகள் உலகெங்கிலும் உள்ள தமிழ் கிறிஸ்தவர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்துள்ளது இந்த பாடல் வரிகளை நம்முடைய தளத்தில் தந்தை அவர்கள் பாடிய வண்ணமாக அமைக்கப்பட்டுள்ளது.
அருட்தந்தை S.J. பெர்க்மான்ஸ் (Fr. S.J. Berchmans) அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் ஊழியப் பாதை குறித்த தகவல்கள் இதுவே
