Unaku Kidaitha Iraivanin உனக்கு கிடைத்த இறைவனின்-J442
கொழுந்துவிட்டு எரிய செய் மகனே (மகளே) (2)
அனல் மூட்டி எரியவிடு
அயல் மொழிகள் தினம் பேசு (2)
வல்லமை அன்பு தள்னடக்கம்
தருகின்ற ஆவியானவர் உனக்குள்ளே (2)
பயமுள்ள ஆவியை நீ பெறவில்லை – 2
பெலன் தரும் ஆவியானவர் உனக்குள்ளே – 2
அனல் மூட்டி எரியவிடு
அயல் மொழிகள் தினம் பேசு (2)
உனக்கு கிடைத்த இறைவனின் கொடையை
கொழுந்துவிட்டு எரிய செய் மகனே (மகளே) (2)
காற்றாக மழையாக வருகிறார்
பனித்துளிப்போல் காலைதோறும் மூடுகிறார் (2)
வற்றாத நீறூற்றாய் இதய கிணறிலே – 2
வாழ்நாள் எல்லாம் ஊறி நிரப்புகிறார் – 2
அனல் மூட்டி எரியவிடுவேன்
அயல் மொழிகள் தினம் பேசுவேன் (2)
எனக்கு கிடைத்த இறைவனின் கொடையை
கொழுந்துவிட்டு எரிய செய்திடுவேன (2)
மகிமையின் மேகம் இவர் தானே
அக்கினித் தூணும் இவர் தானே (2)
நடக்கும் பாதையெல்லாம் தீபமானார் (நாம்) – 2
நாள் தோறும் வசனம் தந்து நடத்துகிறார் – 2
அனல் மூட்டி எரியவிடுவேன்
அயல் மொழிகள் தினம் பேசுவேன் (2)
எனக்கு கிடைத்த இறைவனின் கொடையை
கொழுந்துவிட்டு எரிய செய்திடுவேன (2)
உள்ளத்தில் உலாவி வாசம் செய்கின்றார்
உற்சாகப்படுத்தி தினம் தேற்றுகிறார் – 2
ஏவுகிறார் எப்பொழுதும் புகழ் துதி பாட – 2
எழுப்புகிறார் தினமும் ஊழியம் செய்ய – 2
அனல் மூட்டி எரியவிடுவேன்
அயல் மொழிகள் தினம் பேசுவேன் (2)
எனக்கு கிடைத்த இறைவனின் கொடையை
கொழுந்துவிட்டு எரிய செய்திடுவேன (2)
தந்தை அவர்கள் இந்த வசனங்களை அடிபடையாக கொண்டு பாடியுள்ளார்
பூரிகை ஊதிடுவோம்
Unakku kitaiththa iraivanin
Lyrics in Thanglish
Unakku kitaiththa iraivanin kotaiyai
Kolunthuvittu eriya sey makanae (makalae) (2)
Anal mootti eriyavidu
Ayal molikal thinam paesu (2)
Vallamai anpu thalnadakkam
Tharukinta Aaviyaanavar unakkullae (2)
Payamulla aaviyai nee peravillai – 2
Pelan tharum Aaviyaanavar unakkullae – 2
Anal mootti eriyavidu
Ayal molikal thinam paesu (2)
Unakku kitaiththa iraivanin kotaiyai
Kolunthuvittu eriya sey makanae (makalae) (2)
Kaattaாka malaiyaaka varukiraar
Paniththulippol kaalaithoraுm moodukiraar (2)
Vattaாtha neeroottay ithaya kinarilae – 2
Vaalnaal ellaam oori nirappukiraar – 2
Anal mootti eriyaviduvaen
Ayal molikal thinam paesuvaen (2)
Enakku kitaiththa iraivanin kotaiyai
Kolunthuvittu eriya seythiduvaena (2)
Makimaiyin maekam ivar thaanae
Akkinith thoonum ivar thaanae (2)
Nadakkum paathaiyellaam theepamaanaar (naam) – 2
Naal thorum vasanam thanthu nadaththukiraar – 2
Anal mootti eriyaviduvaen
Ayal molikal thinam paesuvaen (2)
Enakku kitaiththa iraivanin kotaiyai
Kolunthuvittu eriya seythiduvaena (2)
Ullaththil ulaavi vaasam seykintar
Ursaakappaduththi thinam thaettukiraar – 2
Aevukiraar eppoluthum pukal thuthi paada – 2
Eluppukiraar thinamum ooliyam seyya – 2
Anal mootti eriyaviduvaen
Ayal molikal thinam paesuvaen (2)
Enakku kitaiththa iraivanin kotaiyai
Kolunthuvittu eriya seythiduvaena (2)
பாடல்களை எழுத்துக்கள் மூலம் தேடுக
Sj.Berchmans Songs Volumes
அருட்தந்தை S.J. பெர்க்மான்ஸ் வாழ்க்கை வரலாறு (ம) ஊழியப் பாதை குறித்த தகவல்கள்.
பிறப்பு: 1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி தந்தை Sj.Berchmans பிறந்தார்
பிறப்பிடம்: தந்தை Sj.Berchmans அவர்கள் சிவகங்கை மாவட்டம், பரமக்குடிக்கு அருகிலுள்ள சூசைப்பார் பட்டி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார்.
பெற்றோர்: அவருடைய பெற்றோர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சூசை மற்றும் பெரியநாயகம் தம்பதியருக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார்.
கல்வி: மதுரையிலுள்ள செயின்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.
பாடல்கள்: தந்தை அவர்கள் அநேக பாடல்கள் பாடியுள்ளார் 480-க்கும் மேற்பட்ட ஆவிக்குரிய பாடல்களை எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார்.
குருத்துவம்: சிறுவயதிலேயே கத்தோலிக்க குருவாக விரும்பிய இவர், திருச்சியில் உள்ள செயின்ட் பால் செமினாரியில் (St. Paul Seminary) பயின்று, 1974-ல் கத்தோலிக்க பாதிரியாராக அருட்பொழிவு செய்யப்பட்டார்.
இசை ஆர்வம்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பணியாற்றியபோது கர்நாடக இசையைக் கற்றுக் கொண்டார். இதுவே அவர் பிற்காலத்தில் பாடல்களை இயற்றவும், இசையமைக்கவும் அடித்தளமாக அமைந்தது.
ஊழியம்: ஜாதி, மத பேதமின்றி அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் ஜெபக்கூட்டங்களை நடத்தி வருகிறார். தற்போது எளிய ஆடைகளையே விரும்பி அணிந்து, தனது ஆன்மீகப் பணியைத் தொடர்ந்து வருகிறார். 1970-களின் இறுதியில் உடல்நலக் குறைவாலும், தனிமையாலும் பாதிக்கப்பட்டிருந்தபோது, இறைவனின் அழைப்பைத் தன் இதயத்தில் உணர்ந்துள்ளார்.
பரிசுத்த ஆவியின் அபிஷேகம்: 1983-ல் டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டு ஆவிக்குரிய அனுபவத்தைப் பெற்றார்.
ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்:
"ஜெபத்தோட்டம்" (Jebathottam Ministries) என்ற அமைப்பை சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நிறுவினார்.
இவர் இயற்றிய "விசுவாச கீதங்கள்" மற்றும் "ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்" பாடல் தொகுப்புகள் உலகெங்கிலும் உள்ள தமிழ் கிறிஸ்தவர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்துள்ளது இந்த பாடல் வரிகளை நம்முடைய தளத்தில் தந்தை அவர்கள் பாடிய வண்ணமாக அமைக்கப்பட்டுள்ளது.
அருட்தந்தை S.J. பெர்க்மான்ஸ் (Fr. S.J. Berchmans) அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் ஊழியப் பாதை குறித்த தகவல்கள் இதுவே
